Monday, September 3, 2012

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruvam valaithanai



வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி 
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு
வல்லியைக்-கண்டு   
சொக்கி மரமென நின்றனை 
தென்மலைக் காட்டிலே 
கல்லினை ஒத்த வலிய மனங்கொண்ட 
பாதகன்-சிங்கன் 
கண்ணிரண் டாயிரங் காக்கைக் 
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு 
பார்ப்பனக் கோலந் தரித்துக் 
கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டிமுழ்ங்குங் 
கடலினை-உடல் 
வெம்பி மறுகிக் கருகிக் 
புகைய வெருட்டினாய்.  
கிள்ளை மொழிச்சிறு வள்ளி  யெனும்பெயர்ச் 
செல்வத்தை-என்றும் 
கேடற்ற வாழ்வினை-இன்ப 
விளக்கை மறுவினாய்.

கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு 
குலைத்தவன்-பானு 
கோபன் தலைபத்துக் கோடி  
துணுக்குறக்  கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்  
மானைப்போல்-தினைத் 
தோட்டத்திலேயொரு பெண்ணை 
மனங்கொண்ட வேலவா! 

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கினன்ப 
மாகுதே;-கையில் 
அஞ்சலெனுங்க்குறி கண்டு 
மகிழ்ச்சி யுன்டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி 
யாவையும்-இங்கு 
நீக்கி அடியரை நித்தமுங் 
காத்திடும  வேலவா!
கூறு பலபலப் கோடி யவுணரின் 
கூட்டத்தைக்-கண்டு 

கொக்கரித் தண்டங் குலுங்க 
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள் 
விரவி பெற்ற பெருங்க
லே. வாடி வேலா!  

No comments:

Post a Comment