Monday, September 3, 2012

முருகா, முருகா, முருகா-Muruga muruga muruga








The lyrics for the other songs will be posted in  separate posts shortly
பல்லவி 
முருகா, முருகா, முருகா 
சரணங்கள் 
1 .வருவாய் மயில்மி தினிலே 
   வடிவேலு டனே வருவாய் 
    தருவாய் நலமுந தகவும் புகழுந
    தவமுந  திறமுந தனமுங் கனமே (முருகா)
 2 .அடியார் பலரிங் குளரே
    அவரை விடுவித்  தருள்வாய்
    முடிய மறையின் முடிவே  அசுரர் 
     முடிவே கருதும் வடிவேலவனே  (முருகா)
3 .சுருதிப் பொருளே வருக,
    துணிவே, கனலே, வருக 
    கருதிக் கருதிக் கவலைப்படுவார் 
     கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா) 
4 . அமரா  வதிவாழ் வுறவே 
     அருள்வாய்! சரணம்!  சரணம்! 
      குமரா பிணியா வையுமே சிதறக் 
      குமுறும் சுடர்வடி வேலவனே, சரணம்  (முருகா) 
5 . அறியர் கியகோ யிலிலே 
      அருளா கியதாய் மடிமேல் 
      பொறிவே லுடனே வளர்வாய்,அடியார் 
     புதுவாழ்  வுறவே புவிமீ தருள்வாய் (முருகா) 
6 . குருவே, பரமன்,மகனே 
     குகையில் வளரும் கனலே  
      தருவாள் தொழிலும் பயனும், அமரர் 
      சமரர் திபனே, சரணம், சரணம் (முருகா)


1 comment:

  1. The visitor from Mountain view, California view this today.(I have yet to transfer the other videos to newer posts)

    ReplyDelete