பல்லவி
முருகா, முருகா, முருகா
சரணங்கள்
1 .வருவாய் மயில்மி தினிலே
வடிவேலு டனே வருவாய்
தருவாய் நலமுந தகவும் புகழுந
தவமுந திறமுந தனமுங் கனமே (முருகா)
2 .அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்
முடிய மறையின் முடிவே அசுரர்
முடிவே கருதும் வடிவேலவனே (முருகா)
3 .சுருதிப் பொருளே வருக,
துணிவே, கனலே, வருக
கருதிக் கருதிக் கவலைப்படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா)
4 . அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம்! சரணம்!
குமரா பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வடி வேலவனே, சரணம் (முருகா)
5 . அறியர் கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்,அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
6 . குருவே, பரமன்,மகனே
குகையில் வளரும் கனலே
தருவாள் தொழிலும் பயனும், அமரர்
சமரர் திபனே, சரணம், சரணம் (முருகா)
The visitor from Mountain view, California view this today.(I have yet to transfer the other videos to newer posts)
ReplyDelete