Thursday, August 16, 2012

தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்-Theerthakaraiyinile therkumoolayile


1.தீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில் 
செண்பகதோ ட்டத்திலே,
பார்த்திரு ந்தால்  வருவேன்-வெண்ணிலாவிலே 
பாங்கியோ டெ ன்றுசொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா 
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப் போலவே 
பாவை தெரியுடீ!
2.மேனி கொதிக்குதடீ-தலை சுற்றியே 
வேதனை செய்குதடீ !
வானி லிடத்தையெல்லாம்-இந்த வெண்ணிலா 
வந்து தாழுவுது பார்.
மோனத் திருக்குதடீ-இந்த வையகம் 
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் -பிரிவென்பதோர்
 நரகத் துழலுவதோ?

3.கடுமை யுடையதடீ -எந்த நேரமும் 
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் -என்னும்போது நான் 
அங்கு வருவதற்கில்லை.
கொடுமை பொறுக்கவில்லை - கட்டுங் காவலும் 
கூடிக் கிடக்குதங்கே;
நடுமை யரசியவள்-எதற்காகவோ 
நாணிக் குலைந்திடுவாள். 

4.கூடிப் பிரியாமலே -ஒரிராவெலாம்  
கொஞ்சிக் குல வியங்கே
ஆடிவிளையாடியே,-உன்றன்மேனியை 
ஆயிரங்கோடிமுறை 
நாடித் தழுவிமனக் -குறைதீர்ந்துநான் 
நல்ல களிஎய்தியே 
பாடிப் பரவசமாய் -நிற்கவேதவம்  
பண்ணிய தில்லையடி! 

No comments:

Post a Comment